×

நீடாமங்கலம் அருகே சாலையில் கிடக்கும் கேபிள் வயரால் விபத்து அபாயம்

 

நீடாமங்கலம், அக். 13: நீடாமங்கலம் ஒன்றியம் பொதக்குடி ஊராட்சி சேகரையில் இருந்து காந்தி காலணி அருகில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கேபிள் வயர் சாலையில் கிடக்கிறது. இந்த சாலையில் கொரடாச்சேரி, அத்திக்கடை, வாளாச்சேரி, பொதக்குடி, சேகரை, லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூர், பூதமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து நடந்தும், சைக்கிள் மற்றும் மோட்டார் பைக்குகளிலும் அதிக வாகனங்கள் சென்று வருகிறது. அவ்வாறு சென்று வரும் போது சாலை ஓரத்தில் உள்ள கேபிள் வயரை இரவு நேரங்களில் சிலர் காலில் தள்ளி நடு ரோட்டில் போடுகின்றனர்.

அப்படி நடு ரோட்டில் போடப்படும் வயர், சைக்கிள் மற்றும் பைக்குகளின் சக்கரங்களில் சுற்றி விடுகிறது. சில நேரங்களில் சாலையில் கிடக்கும் கேபிள் வயரால் வாகனத்தில் சிக்கி கீழே விழுந்து செல்கின்றனர். இதனால் சிலர் ரத்த காயத்துடனும் செல்கின்றனர். எனவே 2 மாதங்களுக்கு மேல் சாலை மற்றும் சாலை ஓரத்தில் மாறி, மாறி கிடக்கிறது. எனவே மக்களுக்கு அச்சத்தையும், விபத்தையும் ஏற்படுத்தும் கேபிள் வயரை அப்புறப்படுத்தி சம்மந்தப்பட்ட துறையினர் விபத்து ஏறபடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நீடாமங்கலம் அருகே சாலையில் கிடக்கும் கேபிள் வயரால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Needamangalam ,Needamangalam Union Pothakudi Panchayat Sekara ,Gandhi Kalani ,Dinakaran ,
× RELATED நீடாமங்கலம் வேளாண் அறிவியல்...